பேரறிவாளன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சு வலி காரணமாக பேரறிவாளன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார். 
பேரறிவாளன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சு வலி காரணமாக பேரறிவாளன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் எழுவரில் ஒருவர் பேரறிவாளன். இவரது விடுதலைக்காக இவரது தாயார் அற்புதம்மாள் பல வருடங்களாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று தொடர்பாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். 

லேசான நெஞ்சுவலி இருப்பதாக பேரறிவாளன் கூறியதை அடுத்து அவருக்கு இதய சிகிச்சை பிரிவிலும் பரிசோதனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com