கடலூர் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், கடலூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பி.பி.கலியபெருமாள் (85) வெள்ளிக்கிழமை (மார்ச் 22) சென்னையில் காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு காலமானார். 1991-96-ஆம் ஆண்டு வரை கடலூர் தொகுதி எம்.பி.யாக கலியபெருமாள் இருந்தார். இவருக்கு, மனைவி கே.ஜானகி, மகன் ஜே.கே.சித்தார்த்தன், மகள்கள் மருத்துவர் கே.செந்தமிழ்செல்வி, கே.லட்சுமிஅருள் ஆகியோர் உள்ளனர். மற்றொரு மகளான கே.சஞ்சிதா ஏற்கெனவே காலமாகிவிட்டார். கலியபெருமாளுக்கு, சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை (மார்ச் 23) பிற்பகலில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 98423 52224.