தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், காலியாக உள்ள சட்டப்பேரவத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது,
தமிழகத்தில் 75 சதவீத இளைஞர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஆதரவாக உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி இல்லை என வாக்குகளுக்காக கூறவில்லை, தேர்தலில் வெற்றி பெற்றாலும் இதே நிலை தான் நீடிக்கும். அதிமுகவுடன் இணைவதற்கு பதிலாக கடலில் குதிக்கலாம் என்று தெரிவித்தார்.