மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுகவுக்கு திமுக ஒதுக்கியிருந்தது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுகவின் மூலமே மதிமுக பெற உள்ளது. இதனால், மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரோடு தொகுதியில் திமுக-வின் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.