மதுக்கடைகளுக்கு 3 நாள் தடை: புதுச்சேரி போலீஸ் உத்தரவு

தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை தினங்களில் மதுக்கடைகளை மூட புதுச்சேரி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
மதுக்கடைகளுக்கு 3 நாள் தடை: புதுச்சேரி போலீஸ் உத்தரவு

தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை தினங்களில் மதுக்கடைகளை மூட புதுச்சேரி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், காலியாக உள்ள சட்டப்பேரவத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதே நாளில் புதுச்சேரிக்கான மக்களவைத் தேர்தலும் நடைபெறுகிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்ரல் 16-ஆம் தேதி மாலை 5 மணி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி இரவு வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுபோன்று வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட புதுச்சேரி போலீஸார் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com