தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை தினங்களில் மதுக்கடைகளை மூட புதுச்சேரி போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலும், காலியாக உள்ள சட்டப்பேரவத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதே நாளில் புதுச்சேரிக்கான மக்களவைத் தேர்தலும் நடைபெறுகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஏப்ரல் 16-ஆம் தேதி மாலை 5 மணி முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி இரவு வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுபோன்று வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட புதுச்சேரி போலீஸார் உத்தரவிட்டனர்.