எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.