சென்னை-திருவள்ளூரில் முதல்வர் பழனிசாமி 3 நாள்கள் பிரசாரம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட மக்களவைத் தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (மார்ச் 25) முதல்   வரும் 27-ஆம் தேதி வரை பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம்
சென்னை-திருவள்ளூரில் முதல்வர் பழனிசாமி 3 நாள்கள் பிரசாரம்

சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட மக்களவைத் தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (மார்ச் 25) முதல்   வரும் 27-ஆம் தேதி வரை பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிமுக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
திங்கள்கிழமை (மார்ச் 25) மாலை 3 மணிக்கு சென்னை ராயபுரத்தில் இருந்து பிரசாரம் தொடக்கம். இதன்பின், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், திரு.வி.க.நகர், துறைமுகம் ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி பேசுகிறார்.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) காலை திருவல்லிக்கேணியில் இருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். தென் சென்னை, மத்திய சென்னை தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குகளைச் சேகரிக்கிறார். அன்றைய தினம் 11 இடங்களில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறார். புதன்கிழமை காலை சோழிங்கநல்லூரில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கும் முதல்வர் பழனிசாமி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாக்குகளைச் சேகரிக்கவுள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. 
கடந்த 20-ஆம் தேதியன்று சேலத்தில் இருந்து தனது தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கினார். சேலம், தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com