மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
மார்க்சிஸ்ட் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது பிரசார பயண விவரம்:
சீதாராம் யெச்சூரி ஏப்ரல் 8-இல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, ஏப்ரல் 9-இல் மதுரை, ஏப்ரல் 10-இல் கோவை, திருப்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
பிரகாஷ் காரத் ஏப்ரல் 8-இல் நாகப்பட்டினம், ஏப்ரல் 14-இல் கோவை ஆகிய தொகுதிகளிலும், பிருந்தா காரத் ஏப்ரல் 5-இல் மதுரை, ஏப்ரல் 6-இல் கோவையிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.