பொதுச் சின்னம் ஒதுக்குங்கள்: தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு 

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில், அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குங்கள் என்றுகூறி தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு செய்துள்ளார். 
பொதுச் சின்னம் ஒதுக்குங்கள்: தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு 

சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில், அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குங்கள் என்றுகூறி தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு செய்துள்ளார். 

அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கவே முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் வைத்த முறையீட்டை நிராகரித்துவிட்டது.

முன்னதாக, விசாரணையின் போது பதிவு செய்யப்படாத கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அமமுக கட்சி பதிவு செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பியது.

அமமுகவை கட்சியாக இன்றைக்கே பதிவு செய்யத் தயார். கட்சியை இன்றே பதிவு செய்தால் குக்கர் சின்னம் வழங்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பொதுச் சின்னம் வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஒரே நேரத்தில்  இரட்டை இலைச் சின்னத்தையும், குக்கர் சின்னத்தையும் கோருவது ஏன்? என்று கேளவி எழுப்பினர்.

விசாரணையின் போது தேர்தல் ஆணையம் தரப்பில் கூறியதாவது, அமமுகவை கட்சியாக பதிவு செய்தாலும் உடனடியாக குக்கர் சின்னத்தை தர முடியாது என்று  தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

கட்சியைப் பதிவு செய்து 30 நாட்களுக்குப் பிறகுதான் பொதுச் சின்னம் ஒதுக்க முடியும். எனவே, தினகரன் கட்சிக்கு உடனடியாக குக்கர் சின்னத்தை பொதுச் சின்னமாக அளிக்க முடியது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது என்று, தினகரனின் கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அதே சமயம், குறுகிய காலமே இருப்பதால், காலத்தைக் கருத்தில் கொண்டு அமமுகவுக்கு ஏதேனும் ஒரு பொதுச் சின்னத்தை ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில், அமமுகவுக்கு பொதுச் சின்னம் ஒதுக்குங்கள் என்றுகூறி தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு செய்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com