தமிழ்நாடு
அரிய வகை உயிரினங்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்களை கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். விமான நிலைய அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் இந்த உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாங்காங்கில் இருந்து வந்தவரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில், ஹார்ன்ட் பிட் வைபர் எனும் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்றும், ரைனோஸாரஸ் இகுவானா இரண்டும், ராக் இகுவானா மூன்றும், எகிப்திய ஆமைகள் 22-ம், ப்ளூ டங்க் ஸ்கிங்க்ஸ் 4-ம், க்ரீன் ட்ரீ தவளைகள் 3-ம் பத்திரமாக மீட்கப்பட்டன.