மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக ஏ.சந்திரசேகரனை நியமித்து, அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராக ஏ.சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார். இந்தப் பொறுப்போடு நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்க உள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள சந்திரசேகரனுக்கு கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.