இலங்கை சிறையில் 100 நாள்களாக இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் விடுதலை

இலங்கை சிறையில் 100 நாள்களாக இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை, அந்நாட்டு ஊர்க்காவல் துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.


இலங்கை சிறையில் 100 நாள்களாக இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை, அந்நாட்டு ஊர்க்காவல் துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜனவரி 13-ஆம் தேதி விசைப்படகில் கடலுக்குச் சென்ற 8 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். அதையடுத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 
இந்த 8 மீனவர்களில் இருவர்  மாணவர்களாவர். எனவே, மாணவர்களின் படிப்பைக் கருத்தில்கொண்டு, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மீனவ சங்கம் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் 8 மீனவர்கள் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மாணவர்களின் படிப்பை கருத்தில்கொண்டு,  8 மீனவர்களையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். ஆனால், விசைப்படகை விடுவிக்க மறுத்துவிட்டார்.  அதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com