பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு  இலவச ஆலோசனை

பிளஸ் 2 மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த கருத்தரங்கம் மே 5 ஆம் தேதி  நடைபெற உள்ளது. 


பிளஸ் 2 மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த கருத்தரங்கம் மே 5 ஆம் தேதி  நடைபெற உள்ளது. 
 நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மேற்படிப்பு குறித்த இலவச ஆலோசனை மற்றும் கருத்தரங்கம் வரும் மே 5 ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி , பட்டிமன்ற பேச்சாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேற்படிப்பு குறித்தும், போட்டித் தேர்வுக்குத் தயாராவது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.  இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வசதிக்காக தாம்பரம், வேளச்சேரி, பரங்கிமலை ரயில் நிலையங்களில் இருந்து பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு  72997 64455.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com