பொள்ளாச்சியில் தொடரும் பரபரப்பு... அரசு மருத்துமனையில் ஆண் குழந்தை கடத்தல்!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரம் ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக தம்பதியினர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். 
பொள்ளாச்சியில் தொடரும் பரபரப்பு... அரசு மருத்துமனையில் ஆண் குழந்தை கடத்தல்!


பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒரு வாரம் ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக தம்பதியினர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். 

காளியாபும் நரிக்கல்பதியை சேர்ந்த பாலன், தேவி தம்பதியரின் இவர்களுக்கு கடந்த 29 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர்களது உறவினர்கள் வந்து விசாரித்து விட்டு சென்றுள்ளனர். 

இந்நிலையில், உறவினர் போல் நடித்து பெண் ஒருவர் குழந்தையை கடத்தியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். 

தம்பதியரின் புகாரையடுத்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிந்துள்ள காட்சி பதிவுகளை வைத்து பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் வீட்டிற்கு செல்ல இருந்த நிலையில் குழந்தை காணாமல் போனது தெரிய வந்தநிலையில் குழந்தையின் உறவினர்கள் கதறி அழும் காட்சி பார்த்த அனைவரையும் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. 

பொள்ளாச்சி பாலியல் விவகாரம், ரிசார்ட் (கேளிக்கை விடுதி) கல்லூரி பயிலும் மாணவர்கள் 159 பேர் பெண் ஒருவருடன் ஆபாச நடனமாடியது, குழந்தை கடத்தல் என பொள்ளாச்சியில் தொடரும் பரபரப்பு சம்பவங்கள் நகர மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com