சென்னை: தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழித்தடங்களைப் பாதுகாப்பது குறித்து தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்று வருகிறது.
வருவாய்த் துறை செயலர், உள்ளாட்சித் துறை செயலர், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், இந்த ஆலோசனைக் கூடட்ம் நடைபெற்று வருகிறது.
இருக்கும் நீர்நிலைகளை பாதுகாப்பது, நீர்வழித்தடங்களை சீரமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.