மழைக் காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிடும் திட்டம் வகுக்க குழு: உயர்நீதிமன்றம் பரிந்துரை

எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் தொகுதி நிதியைப் பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் பருவமழைக் காலங்களில் வீணாகும் நீரை கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களுக்குத் திருப்பிவிடுவது தொடர்பாக திட்டத்தை
மழைக் காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பிவிடும் திட்டம் வகுக்க குழு: உயர்நீதிமன்றம் பரிந்துரை


எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் தொகுதி நிதியைப் பயன்படுத்தி, தமிழகம் முழுவதும் பருவமழைக் காலங்களில் வீணாகும் நீரை கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளங்களுக்குத் திருப்பிவிடுவது தொடர்பாக திட்டத்தை வகுக்க குழு அமைக்குமாறு, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டம், முருங்கதொழுவு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவி, கவுன்சிலர்கள் செந்தில் மற்றும் பழனிசாமி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு மாவட்டம் ஒலக்காட்டுபதி தடுப்பணையில் இருந்து கசியும் உபரி நீரை, குழாய்கள் மூலம் முருங்கதொழுவு, கலிகவளசு மற்றும் புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்குத் திருப்பி விடுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு ஈரோடு மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியை ஒதுக்கி ஒப்புதலும் அளிக்கப்பட்டது. மேலும், கடந்த 2015-ஆம் ஆண்டு திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. ஆனால் திட்டம் தொடங்கப்படவில்லை, எனவே, இந்த திட்டத்தை தொடங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த 3 கிராமங்களுக்கும் தண்ணீர் வசதி வழங்குவதற்காக ரூ. 23 லட்சம் செலவில் குழாய்கள் பதிக்கவும், சூரிய மின்சக்தி மோட்டார்களுக்கு ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வேளாண் நிலங்களை பாதுகாக்கவும், தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்கவும், தடுப்பணையில் வீணாகும் கசிவு நீரை கிராமப்புறக் குட்டைகளுக்கு கொண்டு சேர்க்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. 
இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். மேலும் எம்.பி., எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கொண்டு பருவமழைக் காலங்களில் வீணாகும் நீரை கிராமப்புறங்களில் உள்ள ஏரி, குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குத் திருப்பி விடுவது தொடர்பாக திட்டம் வகுக்கக் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என பரிந்துரைத்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டத்தை 4 வார காலத்துக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட செயற்பொறியாளருக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com