பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநரிடம் தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநரிடம் தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
மாதிரி வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடியால் மறுவாக்குப்பதிவு என தேர்தல் ஆணையமே கூறிவிட்டது. 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.