பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் மூதாட்டி அனுமதி

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மூதாட்டி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் மூதாட்டி அனுமதி

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் மூதாட்டி வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

பூதப்பாண்டி அருகேயுள்ள குறத்தியறை பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (69). இவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை சென்ற இவருக்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறியுள்ளதாக கூறி, தனியாக வார்டு ஒதுக்கி தீவிர கிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சரோஜாவுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளதாக சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதன் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே நோய் பாதிப்பு குறித்து உறுதிப்படுத்த முடியும்  என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com