மதுரை: நடப்புக் கல்வி ஆண்டு முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்பில் இட ஒதுக்கீட்டு பிரிவில் பணியில் உள்ள ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கும் ஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் குறளரசன் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படுவது போல பணியில் உள்ள ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி இட ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி, பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இந்தியா திரும்பிய வீரர் அபினந்தனின் பிள்ளைக்கு எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் படிக்க இட ஒதுக்கீடு வழங்கப்படாது. ஆனால், அவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டால் அவரது பிள்ளைக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.