கல்லூரி மாணவி திலகவதி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.


கருவேப்பிலங்குறிச்சி கல்லூரி மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
மாணவி திலகவதி கடந்த 8-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். 
இதைக் கண்டித்து சென் னை  வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு திருமாவளவன் அளித்த பேட்டி:
மாணவி திலகவதி காட்டுமிராண்டி கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உள்படுத்த வேண்டும். திலகவதியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதோடு,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
மேலும், திருவாண்டுதுறை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், கொல்லிமலை சாதிய வெறியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com