திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றின் கரையோரம் கிடந்த 3000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மீட்பு

திருவாரூர் அருகே முள்ளியாற்றின் கரையோரம் 3,000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவரம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. 
திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றின் கரையோரம் கிடந்த 3000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மீட்பு

திருவாரூர் அருகே முள்ளியாற்றின் கரையோரம் 3,000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவரம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் முள்ளியாற்றின் கரையோரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அப்பகுதியில் மர்ம மூட்டை கிடந்ததை கண்டறிந்தனர். உடனே அந்த மூட்டையை பிரித்து பார்த்ததில் அதில் நிறைய ஆதார் கார்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து ஊராட்சி துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த அதிகாரிகள், அப்பகுதியில் ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் மூட்டையில் இருந்த 3,000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை மீட்டனர். 

மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com