அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக சூரப்பா கூறியது தவறானது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியல்,
கமலின் கருத்து பற்றி யாரும் பேசக்கூடாது என உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளதால் நான் கருத்துகூற இயலாது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.
தமிழகம் முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசியல் தலையீடு என துணைவேந்தர் கூறுவது தவறானது என்றார்.