தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு இவ்வளவு அவசரமா? 

தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மிக அவசரமாக செய்த ஒரு செயல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு இவ்வளவு அவசரமா? 


தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மிக அவசரமாக செய்த ஒரு செயல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தேனி மாவட்டம் குச்சனூர் கோயில் கல்வெட்டில் ஓபிஎஸ் மகனின் பெயர் ரவீந்திரநாத்துக்கு அருகே எம்.பி. என்று சேர்க்கப்பட்டிருந்தது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் குச்சனூரில் உள்ள காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலயத்திற்கு நன்கொடை கொடுத்தவர்களின் கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் நன்கொடை கொடுத்தவர்களின் பெயரில் ஓபிஎஸ் மகனின் பெயர் ரவீந்திரநாத் எம்.பி. என்று எழுதப்பட்டிருந்தது.

தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில், இவ்வாறு எம்.பி. என்று பெயருடன் சேர்த்திருப்பது கடுமையான சர்ச்சையைக் கிளப்பியது.

இதனால், கோயில் நிர்வாகம் தரப்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே வைக்கப்பட்ட கல்வெட்டில் மற்றொரு புதிய கல்வெட்டு வைக்கப்பட்டு, அவரது பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com