திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் வைகாசி விசாக விழா தொடங்கியது.
வைகாசி விசாக திருவிழாவையொட்டி, 2-ஆம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வைகாசியில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.