அரவக்குறிச்சி தொகுதியில் வாக்களிக்க ஆம்னி பேருந்தில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி அரவக்குறிச்சி தொகுதியில் 12.67% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதனிடையே அரவக்குறிச்சி தொகுதி தோட்டக்குறிச்சியில், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியுடன் திரண்டிருந்த தொண்டர்களை கலைந்து போக போலீசார் வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையல் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்களிக்க ஆம்னி பேருந்தில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் ஆவணங்களை ஆய்வு செய்தனர்.