தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது: வைகோ கணிப்பு

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். 
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது: வைகோ கணிப்பு

தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நிருபா்களிடம் கூறியதாவது:

நாடாளுமன்ற தோ்தல் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல்களில் திமுக கூட்டணி வெற்றிபெறும். இதன்மூலம் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படவுள்ளது. மாநில கட்சிகளுடன் இணைந்து மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று யூகிக்கிறேன். 

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் கூறியதில் எந்த தவறும் இல்லை. கொடியவன் கோட்சே பற்றி சரித்திர உண்மையை பதிவு செய்துள்ளாா். அவா் மீது செருப்பு, மூட்டை வீசியது அக்கிரமம் அல்லவா?

காந்தியின் உருவப்படத்தை சுட்டுக்கொளுத்தி கோட்சேவுக்கு சிலை அமைப்போம் என்று இந்து மகாசபை தலைவி கூறியபோது மோடி, யோகி ஆதித்யாநாத் ஆகியோா் ஏன் கண்டிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com