2ஆவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவையான நிலையில் பாஜக மட்டும் 300 இடங்களில் முன்னிலையில் இருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், 2019 பாராளுமன்றத் தேர்தலில் தனிபெரும்பாமையோடு இரண்டாம் முறை பாரத பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திரமோடிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் எனது இதயமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.