ஆத்ம பரிசோதனை செய்யும் நேரம் இது; மக்கள் தவறு செய்துவிட்டார்கள்: தமிழிசை 

தமிழகத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, இது ஆத்ம பரிசோதனை செய்யும் நேரம் என்று தெரிவித்துள்ளார்.
ஆத்ம பரிசோதனை செய்யும் நேரம் இது; மக்கள் தவறு செய்துவிட்டார்கள்: தமிழிசை 

தமிழகத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, இது ஆத்ம பரிசோதனை செய்யும் நேரம் என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் பாஜகவை ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். தூத்துக்குடியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே வேட்பாளராக நின்றேன். தூத்துக்குடியில் என்னவெல்லாம் நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். நல்லது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.

அதற்காக தோல்வி அடைந்து விட்டேன் என்பதால் நலத்திட்டங்களை செய்யாமல் நிறுத்தப் போவதில்லை. விரைவில் தூத்துக்குடியில் சிறுநீரக நோய்களை ஆய்வு செய்ய மருத்தவ பரிசோதனை முகாம் நடத்தப்படும். தோற்றுவிட்டேன் என்பதற்காக மக்கள் பணியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.  தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க என்னால் முடிந்தபணிகளை மேற்கொள்வோன். 

எனக்கு வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தூத்துக்குடியில் எனது மக்கள் பணி தொடரும்.

மக்கள் தவறு செய்துவிட்டார்கள். மோடிக்கு வாக்களித்திருந்தால் பல நன்மைகள் கிடைத்திருக்கும். தற்போது மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது ஊழல் குற்றச்சாட்டு உடைய ஒருவரை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக வலுப்பெற வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறோம். வருங்காலத்தில் எங்களது நல்லத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com