மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவையான நிலையில் பாஜக மட்டும் 300 இடங்களில் முன்னிலையில் இருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 2ஆவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதன் மூலம் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.