திமுக எம்பி கனிமொழி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2018ல் திமுக ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததாக கனிமொழிக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனிடையே இவ்வழக்கை ரத்து செய்யக் கோரியும் ஆஜராக அளிக்கப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் கனிமொழி ஆஜராக விலக்களித்து விசாரணைக்கு தடை விதித்தது.