நஞ்சை விதைத்து வெற்றியை அறுவடை செய்துள்ளது திமுக: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நஞ்சை விதைத்து வெற்றியை அறுவடை செய்துள்ளது திமுக என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.  
நஞ்சை விதைத்து வெற்றியை அறுவடை செய்துள்ளது திமுக: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நஞ்சை விதைத்து வெற்றியை அறுவடை செய்துள்ளது திமுக என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.  

இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் எண்ணம். இந்த ஆட்சியை நடத்துவதற்கு எவ்வளவு பெரும்பான்மை தேவையோ அதை எடப்பாடி ஆட்சிக்கு மக்கள் வழங்கியுள்ளார்கள். இந்தியா முழுக்க பாஜகவின் அலைதான் அடித்துள்ளது.

மக்கள் சிந்தித்து கொண்டிருக்கும் நேரத்தில் விஷத்தை விதைத்து, அதன் மூலமாக திமுக அறுவடை செய்து உள்ளார்கள். ஒரு பொய்யான பிரசாரத்தை ஆரம்பத்தில் இருந்து முன்னிலைபடுத்தி அதை நம்பக்கூடிய நிலைமையில் மக்களை கொண்டு சென்று அதன்மூலமாக அறுவடை செய்துள்ளனர். அதை உண்மையான வெற்றியாக கருத முடியாது. 

திமுக அதிமுகவை வீழ்த்தி இருந்தால் சட்டமன்றத்தில் நாங்கள் எப்படி வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்றி இருக்க முடியும். சட்டப்பேரவையில் எடப்பாடி ஆட்சி தான் வேண்டும் என மக்கள் கொடுத்திருக்கின்ற வைரம் கீரிடம் தான் இந்த ஆட்சி. அதிமுகவை அழிப்போம் என்று கூறியவர்கள் அழிந்து விட்டார்கள்.

எங்களுக்கு இனிமே போட்டி திமுக மட்டும்தான். தினகரன் எத்தனை நாள் பொய் சொல்லி கட்சியை ஏமாற்ற முடியும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com