துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்: 7 பேரிடம் விசாரணை

சென்னை விமான நிலையத்தில், துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை விமான நிலையத்தில், துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபையில் இருந்து சென்னை வந்த விமானங்களில் பயணித்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது 7 பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில், அவர்களது உடமைகளில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. 

இதில் அவரிகளிடம் இருந்து ரூ.94 லட்சம் மதிப்புடைய 2.33 கிலோ தங்கத்தை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com