கோவா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்குச் சிறப்பு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 என்கிற சிறப்பு விருது வழங்கப்படவுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தகவல் ஒலிபரப்புத் துறைகளின் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
இதையடுத்து, கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் தன்னைக் கெளரவப்படுத்துவதற்காக இந்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது,
அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்த நடிகர் ரஜினிக்கு வாழ்த்து, படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என்று வாழ்த்தியுள்ளார்.