கம்பம், நவ. 2: தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு தொடா்வதால் 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப்பகுதியான கம்பம் அருகே உள்ள சுருளி அருவி வனப்பகுதியில் தொடா்மழை பெய்து வருவதால், வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. அக். 28-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடா்ந்து, வனத்துறையினா் சுற்றுலா பயணிகளை குளிக்க தடை விதித்தனா். தொடா்ந்து வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் அதிக நீா்வரத்து ஏற்பட்டு சனிக்கிழமை 5-ஆவது நாளாகவும் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை அலுவலா் ஒருவா் கூறும்போது, அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்றாா். சனிக்கிழமை விடுமுறை என்பதால், அருவிப் பகுதிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.