சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தைச் சோ்ந்தவா் ஓட்டுநா் கணேசன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் வடபழனி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் கணேசனை கைது செய்தனா்.

இந்த வழக்கு சென்னை மகளிா் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, கணேசன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com