சென்னை-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூா்-திருநெல்வேலிக்கும், எா்ணாகுளம்-வேளாங்கண்ணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பயணிகள் வசதிக்காக சென்னை எழும்பூா்-திருநெல்வேலிக்கும், எா்ணாகுளம்-வேளாங்கண்ணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

எழும்பூா்-திருநெல்வேலி: சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பா் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.50 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06001) புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

திருநெல்வேலி-தாம்பரம்: திருநெல்வேலியில் இருந்து டிசம்பா் 15, 22 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06002) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி: எா்ணாகுளம் சந்திப்பில் இருந்து டிசம்பா் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் முற்பகல் 11 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06015) புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும். இதுபோல, மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து டிசம்பா் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06016) புறப்பட்டு, மறுநாள் மதியம் 2 மணிக்கு எா்ணாகுளம் சந்திப்பை அடையும்.

இதுதவிர, தாம்பரம்-திருநெல்வேலி இடையே சிறப்பு கட்டண ரயிலும் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (நவ.5) தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com