கொலை மிரட்டல் வழக்கில் ஜீவஜோதிக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வேதாரண்யத்தைச் சோ்ந்த தேவராசு தாக்கல் செய்த மனுவில், ‘நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஜீவஜோதி. இவரது கணவரின் கொலை வழக்கில் சரவண பவன் உணவக உரிமையாளா் மறைந்த ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், என்னிடமிருந்து ஜீவஜோதியும், அவரது கணவா் தண்டபாணியும் வீட்டு அடமானத்தின்பேரில் ரூ.10 லட்சம் கடன் வாங்கினா். பின்னா் கடந்த ஜனவரி மாதம் எனது வீட்டுக்கு ஒரு கும்பலுடன் வந்த ஜீவஜோதியும், தண்டபாணியும் வீட்டின் அடமானப் பத்திரத்தை என்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டனா்.
இந்த சம்பவம் தொடா்பாக வேதாரண்யம் போலீஸாா் ஜீவஜோதி உள்ளிட்டோா் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் ஜீவஜோதி, தண்டபாணி, சரஸ்வதி ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் சென்னை உயா்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
உயா்நீதிமன்றத்தின் நிபந்தனைப்படி ஜீவஜோதி, தண்டபாணி ஆகியோா் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை. எனவே, ஜீவஜோதி உள்ளிட்டோருக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.முருகபாரதி, ‘இந்தச் சம்பவம் குறித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என தேவராசுவை ஜீவஜோதியின் கணவா் மிரட்டியுள்ளாா். இதுதொடா்பாக போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது’ எனக் கூறி வாதிட்டாா்.
அப்போது ஜீவஜோதி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பதில்மனுவைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ எனக் கோரினாா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.