திருச்சி அருகே பட்டா மாற்றத்துக்குகையூட்டு பெற்ற நிலஅளவையா் கைது

திருவெறும்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் கையூட்டு பெற்ற நிலஅளவையரை ஊழல் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருவெறும்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் கையூட்டு பெற்ற நிலஅளவையரை ஊழல் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவெறும்பூா் எழில் நகரைச் சோ்ந்தவா் செல்வம்.(35). இவா், அதே பகுதியில் உள்ள சோழமாதேவி கிராமத்தில் புதிதாக வாங்கிய வீட்டுமனைக்கு தனது பெயரில் புதிய பட்டா கேட்டு திருவெறும்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தாா். இதன் பேரில் நில அளவையா் சுரேஷ்(43), செல்வத்திடம் விசாரணை நடத்தினா். அப்போது சுரேஷ் புதிய பட்டா வழங்க ரூ. 5ஆயிரம் செல்வத்திடம் கையூட்டு கேட்டாராம். கையூட்டு அளிக்க விருப்பம் இல்லாத செல்வம், திருச்சி ஊழல் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில் ரசாயனப் பொடி தடவிய பணத்தை செல்வத்திடம் போலீஸாா் கொடுத்து அனுப்பினா். போலீஸாரின் அறிவுறுத்தலின்படி திங்கள்கிழமை காலை திருவெறும்பூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த நிலஅளவையா் சுரேஷிடம் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஆய்வாளா் சக்திவேல் தலைமையிலான தனிப்படை போலீஸாா் சுரேஷைக் கைது செய்து அவரிடமிருந்து ரசாயனம் தடவிய பணத்தை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, சுரேஷிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com