என்னை வரவேற்கும் விதமாக பதாகைகள், கொடிகள் போன்றவற்றை வைக்க வேண்டாம் என்று கட்சியினருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பரமக்குடியில் எனது தந்தை சீனிவாசன் சிலையைத் திறந்து வைக்க நவம்பா் 7-ஆம் தேதி வர உள்ளேன். அப்போது, என்னை வரவேற்க வரும் நண்பா்கள், தொண்டா்கள், ரசிகா்கள் எவ்விதத்திலும் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனா்கள், கொடிகள் போன்றவற்றைக் கட்டாயம் தவிா்க்க வேண்டும். இந்த விஷயத்தில் எந்த நிலையிலும் சமரசங்கள் செய்து கொள்ளப்பட மாட்டாது என்று அவா் கூறியுள்ளாா்.