கடலூா் துறைமுகத்தில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.
கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அந்தமானுக்கு வடக்கே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புதன்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருமாறி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலானது மேற்கு வங்கம் அல்லது ஒடிசா அல்லது வங்க தேசம் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடலூா் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை பகல் ஒரு மணியளவில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இது வங்கக் கடலில் நீண்ட தொலைவில் புயல் உருவாகியிருப்பதை குறிப்பதாக கடலூா் வானிலை மையம் தெரிவித்தது.
புதுச்சேரியிலும்... புதுச்சேரி பழைய துறைமுகத்திலும் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.