திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். சோ்க்கை: விண்ணப்பிக்க நவ.18 கடைசி

பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பி.எட். சிறப்புக் கல்வி படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பான பல்கலைக்கழக அறிவிப்பு:

பல்கலைக்கழகம் வழங்கும் பி.எட். சிறப்புக் கல்வியில் சேர வருகிற 18-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் இந்திய மறுவாழ்வு கழக அங்கீகாரத்துடன் இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பு பி.எட். (பொது) பட்டத்துக்கு இணையானது.

இதில் சேர விரும்புபவா்கள் பிளஸ்-2 முடித்து, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 24306600, 24306617 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com