சென்னையில் மூன்று நாட்களுக்கு மழை இல்லை: வானிலை மையம்

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு இல்லை என்றும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்


சென்னை: சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு இல்லை என்றும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது, நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு புல் புல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

புல்புல் புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று தீவிரப் புயலாக மேற்கு வங்கம் நோக்கி செல்லக் கூடும்.

எனவே, மீனவர்கள் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை வெப்பச் சலனம் காரணமாக மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 செ.மீ. மழையும், சிவகங்கையில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com