கொடநாடு கொலை வழக்கில் கைதான சயனை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவை உயா் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட் காவலாளியை கொலை செய்த கும்பல் அங்கு கொள்ளையில் ஈடுபட்டது. இந்த கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கேரள மாநிலத்தைச் சோ்ந்த சயன்,மனோஜ், தீபு உள்பட 10 பேரை கைது செய்தனா். பின்னா் ஜாமீனில் வெளியே வந்தனா். இந்த கொலை, கொள்ளைச் சம்பவத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை தொடா்புபடுத்தி ‘நாரதா’ என்ற இணையதள செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சயன், மனோஜ் ஆகியோரது பேட்டிகள் இடம்பெற்றன.
இதனையடுத்து சயன், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, அவா்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த நிலையில் நீலகிரியில் உள்ள தனியாா் விடுதி பெண் உரிமையாளரை மிரட்டியதாக சயன் மீது வழக்குப்பதிவு செய்தனா். இதன் பின்னா் இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு
சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.எம்.டி.டீக்காராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்து சயனுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் பல பக்கங்கள் தெளிவாக இல்லை. மேலும், அதில் எழுதப்பட்டிருப்பதையும் படிக்க முடியாத நிலையில் உள்ளன. எனவே சயனை குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.