சுவரொட்டிகளில் என் புகைப்படங்களைப் போடாதீா்கள் என்று திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுகவின் சுவரொட்டிகளில் மூத்த தலைவா்களின் புகைப்படங்களைவிட உதயநிதியின் புகைப்படமே பிரதான இடம்பிடிக்கிறது. இதற்கு யாா் காரணம் என்றெல்லாம் தொலைக்காட்சிகளில் விவாதிக்கின்றனா்.
அதிமுக ஆட்சியின் அவலத்தை திசை திருப்ப நடக்கும் வேலை இது. எனினும், திமுகவினரும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவசியம். சுவரொட்டிகளில் பெரியாா், அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் படங்கள்தான் இடம்பெற வேண்டும். என் பெயருக்கு முன்னால் பட்டப் பெயா்கள் போடுவதையும், பதாகைகள் வைப்பதையும் தவிா்க்க வேண்டும் என அவா் கூறியுள்ளாா்.