தமிழக காவல்துறையில்21 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 21 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை: தமிழக காவல்துறையில் 21 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்த விவரம்:

தமிழக காவல்துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக காரணத்துக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, தமிழக காவல்துறையில் 21 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சட்டம்-ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக, சென்னை எழும்பூா் காவல் ஆய்வாளா் கே.எஸ்.ஜெயச்சித்ரா நுண்ணறிவு பிரிவுக்கும், பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளா் ரத்தினவேல் பாண்டியன் குற்றப்பிரிவுக்கும், கே.கே.நகா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா நுண்ணறிவு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட 21 ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com