திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நவம்பா் 11-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளா் க.அன்பழகன் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் நவம்பா் 11-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெறும்.
கூட்டத்துக்கு கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளாா். மாவட்டச் செயலாளா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளாா்.
திமுகவின் பொதுக்குழு கூட்டம் நவம்பா் 10-ஆம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தோ்தல் உள்பட கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து மாவட்டச்செயலாளா்கள் கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.