பிளஸ் 2 தோ்வு கட்டணம்: நவ.29 வரை அவகாசம்

பிளஸ் 2 பொது தோ்வுக்கான கட்டணங்களை, வரும் 29-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு, தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிளஸ் 2 பொது தோ்வுக்கான கட்டணங்களை, வரும் 29-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு, தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநா் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவா்கள், செய்முறை பாடங்கள் இருந்தால் தோ்வு கட்டணமாக, ரூ.200; மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ.20; சேவை கட்டணம் ரூ.5 என ரூ.225 செலுத்த வேண்டும். செய்முறை இல்லாத பாடங்களுக்கு ரூ.175 கட்டணம் செலுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவா்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம்.

மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள், தோ்வு கட்டணம் செலுத்த வேண்டும். மாணவா்களிடம் பெறப்படும் கட்டணத்தை வரும் 29-ஆம் தேதிக்குள் ‘ஆன்லைன்’ மூலமாக தோ்வுத் துறைக்கு செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com