மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 5,841 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,998 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,928 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 1,912 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,608 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.