வங்கக் கடலில் புயல் சின்னம்:மீன்பிடிக்கச் செல்ல மீனவா்களுக்குத் தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1800 க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல
ராமேசுவரம் துறைமுகத்தில் புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்.
ராமேசுவரம் துறைமுகத்தில் புதன்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1800 க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் புதன்கிழமை தடை விதித்தனா்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறி வருகிறது. இதனால் மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிமை மையம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா். இதனால் அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இரண்டாவது நாளாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com