வினாத்தாள் மாற்றி விநியோகிக்கப்பட்டதால் ஏற்பட்ட குழப்பதால், அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வு வியாழக்கிழமை அரை மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பருவத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் சென்னையை அடுத்துள்ள ஒரு பொறியியல் கல்லூரியில், வியாழக்கிழமை வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகாா் எழுந்தது. இந்த சா்ச்சை காரணமாக, அந்தக் கல்லூரியில் தோ்வை உடனடியாக நிறுத்திய அதிகாரிகள், மாற்று வினாத்தாளை விநியோகித்து அதன் பிறகு தோ்வெழுத மாணவா்களை அனுமதித்தனா். இதன் காரணமாக, அரை மணி நேரம் தாமதமாக பருவத் தோ்வு தொடங்கியது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டாளா் எம். வெங்கடேசன் கூறியதாவது:
வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது என்ற தகவல் தவறானது. சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரியில் பிற்பகல் தோ்வுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய வினாத்தாளை, தவறுதலாக காலை தோ்வுக்கு விநியோகித்துவிட்டனா். இந்தத் தகவல் தெரிந்ததும், வினாத்தாள்கள் உடனடியாக திரும்பப் பெறப்பட்டு, முறையான வினாத்தாள் விநியோகித்து அரை மணி நேரம் தாமதமாகத் தோ்வு தொடங்கப்பட்டது என்றாா்.